தாமதிக்காமல்... உடனடியாக இதை செய்யுங்கள்! ஜேர்மனியின் 16 கூட்டாட்சி மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் மூன்றாவது அலைகளை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், நடவடிக்கைகள் குறித்த தேசிய சட்டம் இயற்றப்படும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் நாட்டின் 16 கூட்டாட்சி மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,426 அதிகரித்தது, மொத்தம் எண்ணிக்கை 3.073 மில்லியனாக உயர்ந்தது, இறப்பு எண்ணிக்கை 293 அதிகரித்து 79,381 ஆக உயர்ந்துள்ளது என்று ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.
நாம் விரைவாக செயல்படாதபோது என்ன நடக்கும் என்பது கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து கற்றுக்கொண்டோம் என்று ஸ்பான் செய்தியாளர்களிடம் கூறினார.
மேலும், மாத இறுதிக்குள் சுமார் 6,000 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என குறிப்பிட்டார்.
ஜேர்மனியின் தடுப்பூசி பிரச்சாரம் வேகமடைந்து வருவதாக ஸ்பான் கூறினார். ஏப்ரல் மாத இறுதிக்குள் சுமார் 20% மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கும், மேலும் அனைத்து பெரியவர்களுக்கும் கோடை இறுதிக்குள் முதல் டோஸ் வழங்கப்படும், என்றார்.
ஆயினும்கூட, கொரோனாவுக்கு எதிராக குழு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய மூன்றாம் காலாண்டு வரை ஆகும் என்று ஸ்பான் எச்சரித்தார்.