சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே மேலும் 3 நோயாளிகள் பரிதாப மரணம்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஆம்புலன்ஸிலேயே மேலும் 3 நோயாளிகள் பரிதாபமாக மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலை மோசமாக உலுக்கி வரும் நிலையில் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று (மே 12ம் திகதி) மட்டும் 30,355 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.
மாநிலத்திலே அதிகபட்சமான சென்னையில் புதிதாக 7564 பேருக்கு தொற்று உறுதியானது.
மாநிலத்தில் மொத்தம் 293 பேர் உயிரிழந்தனர், குறிப்பாக சென்னையில் மட்டும் 89 பேர் உயரிழந்தனர்.
சென்னைியல் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் ஆம்புலன்ஸிலே காத்திருக்கின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மொத்தம் 845 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் நிரம்பியுள்ளது.
இதனால், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் நேற்று மட்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சிலேயே 6 நோயாளிகள் உயிரிழந்தனர்.
12th May, 2AM: scene outside GH #Chennai; the ground reality of non-availability of #beds.
— Preejo TJ (@PreejoTj) May 13, 2021
it has become a common sight to see 20-40 ambulances lined up for hours with patients & families looking for a bed.
this has been the case since 2nd May - across pvt & govt #hospitals. pic.twitter.com/9gMbA2nHjs
இந்நிலையில், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் இன்றும் ஆம்புலன்சிலேயே மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைக்காக ஆம்புலன்ஸிலே காத்திருந்த 9 நோயாளிகள் உயரிழந்துள்ளனர்.