நள்ளிரவில் தாய் கொலை! விடிய விடிய உடல் அருகே இரத்தத்துடன் அமர்ந்திருந்த மகன்.. பதற வைக்கும் கொடூர சம்பவம்
இந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்து விடிய விடிய உடலுடன் மகன் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(70). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் தவறிவிட்டதால் தனி ஆளாக நின்று தனது ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து அவரது கடைசி மகன் பழனிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பழனி தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன் தினம் பழனி தனது தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பழனி தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இறந்த சடலத்தில் இருந்து வழியும் இரத்தத்துடன் விடிய விடிய அமர்ந்து இருந்துள்ளார்.
காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர். அப்போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.