வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை

Germany flight
By Balamanuvelan May 25, 2021 12:04 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொல்லி, போர் விமானங்கள் உதவியுடன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையன்று, ஏதென்ஸிலிருந்து லிதுவேனியா நோக்கி சென்று கொண்டிருந்த Ryanair நிறுவன விமானம் ஒன்று பெலாரஸ் வான் வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று அதை அணுகியது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனே அந்த விமானத்தை பெலாரஸ் நாட்டில் தரையிறக்குமாறும், மறுத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்படவே, உடனடியாக அந்த விமானம் பெலாரஸ் நாட்டின் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

திடீரென விமானத்தை போர் விமானம் ஒன்று தரையிறக்க உத்தரவிட்டதால், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் ஏறிய பெலாரஸ் பொலிசார், விமானத்திலிருந்த Roman Protasevich (26) என்ற இளைஞரையும் அவரது காதலியான Sofia Sapega என்ற இளம்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

Protasevich பெலாரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். அவர் லிதுவேனியாவில் தலைமறைவாக இருந்தார்.

அவர் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்துகொண்டதால் இப்படி அவர் நடுவானில் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர்களை கைது செய்வதற்காகவே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதும் தெரியவரவே, இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

இந்நிலையில், பெலாரஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய ஜேர்மனி, உடனடியாக ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது. Ryanair விமானம் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்காக அளித்த விளக்கம் அர்த்தமற்றது என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, விமானத்தில் என்ன நடந்தது, விமானம் தரையிறக்கப்பட்டபின் என்ன நடந்தது என்பதற்கான விளக்கம் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US