தமிழக உள்ளாட்சி தேர்தலில் 22 வயது சுயேட்சை வேட்பாளர் சினேகா வெற்றி! பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளினார்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்ற 22 வயது பொறியியல் பட்டதாரி பெண் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ம் திகதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 60.70% வாக்குகள் பதிவாகியது.
இன்று அந்த தேர்தல் முடிவுகளை அறிவித்து வருகிறது மாநில தேர்தல் ஆணையம். இந்நிலையில் திருச்சி துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5-ல் சினேகா என்ற பட்டதாரி சுயேட்சையாக போட்டியிட்டார்.
494 வாக்குகள் பெற்று சினேகா அந்த வார்டில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வெற்றி அந்த வார்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சில நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.