223 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆன இந்தியா! தென் ஆப்பிரிக்கா பவுலிங்கில் அசத்தல்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப் டவுன் நியூலேண்டில் இன்று துவங்கியது. அதன் படி, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல்(12), மயங்க் அகர்வால் 15 ஓட்டங்களில் அவுட் ஆக, அதன் பின் வந்த புஜாரா, விராட் கோலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
புஜாரா 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தவுடன் அடுத்து வந்த ரஹானே(9), ரிஷப் பண்ட் (27), அஸ்வின்( 2), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (0), முகமது சமி (7) என ஆட்டமிழக்க, கோலி 79 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இறுதியாக இந்திய அணி 223 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளும், ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் ஆடி வருகிறது.