ஆயுத இறக்குமதியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா!
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுதம் இறக்குமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2021 முதல் 2025 காலகட்டத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி நாடாகத் திகழ்ந்துள்ளது.
மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீத பங்கை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆயுத கொள்முதல், சீனாமற்றும் பாகிஸ்தானுடன் நிலவும் பதற்றத்தால் அதிகரித்துள்ளது.

2025 மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட குறுகிய கால ஆயுத மோதலில் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
கடந்த ஒரு சதாப்தத்தில், இந்தியா தனது ஆயுத முள்முதல் உறவுகளை ரஷ்யாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றியுள்ளது. 2011-2015 காலகட்டத்தில் 70 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2021-2025 காலகட்டத்தில் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேசமயம், பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவில் ஆயுதங்களை வங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 2026-2027-ல் ரூ. 7.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 75 சதவீதம் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரான்சுடன் ரஃபேல் விமானங்கள், நீர்மூழ்கி திட்டங்கள், ஹெலிகாப்டர் உற்பத்தி போன்ற பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
உலகளவில், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜேர்மனி, சீனா ஆகியவை 2021-2025 காலகட்டத்தில் 70 சதவீதம் ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளன. இதில் அமெரிக்காவின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |