இந்தியாவில் காப்பீட்டு துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி
இந்திய அரசு, காப்பீட்டு துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முழுமையான பங்குதாரர்களாக இருக்கலாம்.
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் Paid-up Equity Capital-ல் 100 சதவீதம் வரை வெளிநாட்டு முதலீடு Automatic Route-இல் அனுமதிக்கப்படும்.
ஆனால், Insurance Regulatory and Development Authority of India (IRDAI) ஒப்புதல் மற்றும் சரிபார்ப்பு அவசியம்” என கூறப்பட்டுள்ளது.

இது Sabka Bima Sabki Raksha (Insurance Laws Amendment) Act, 2025 சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
2025 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், FDI ceiling-ஐ 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தியது.
ஆனால், LIC-க்கு (Life Insurance Corporation of India) தனிப்பட்ட விதிமுறைகள் தொடரும். LIC-இல் வெளிநாட்டு முதலீடு 20 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
மேலும், வெளிநாட்டு முதலீடு கொண்ட காப்பீட்டு நிறுவனங்களில், Chairperson, Managing Director அல்லது CEO ஆகிய முக்கிய பதவிகளில் குறைந்தது ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.
இந்த மாற்றம், இந்திய காப்பீட்டு துறையில் வெளிநாட்டு பங்கேற்பை அதிகரித்து, நிதி சந்தையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |