ரூ.41,863 கோடிக்கு 22 மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி: இந்திய அரசு ஒப்புதல்
ரூ.41,863 கோடி முதலீட்டில் மின்னணு உதிரி பாகங்களுக்கான உற்பத்தி திட்டத்திற்கு இந்தியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
22 மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி
22 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான ரூ.41,863 கோடி முதலீடு திட்டத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டிக்சன், சாம்சங், டிஸ்பிளே மற்றும் பாக்ஸ்கான், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் 22 மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக மின் னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த திட்ட ஒப்பந்த முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ,41.863 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த உற்பத்தி திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட 33,791 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 மின்னணு பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் மூலமாக ரூ.2,58,152 கோடிக்கு மின்னணு உதிரி பாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்புதல் கடிதங்களை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |