கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் இரண்டாம் அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த மூன்றாவது அவசரகால கொரோனா தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனெவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தடுப்பு மருந்தாக பயன்படுத்த இந்திய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
Sputnik-V தடுப்பூசியை உலகில் 59 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 91.6 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுவருகிறது.