ராணுவ ஆளில்லா விமானங்களை தயாரிக்க சீன உபகரணங்கள்; இந்தியா தடை
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ராணுவ ஆளில்லா விமானங்களை தயாரிக்க சீன கருவிகளை பயன்படுத்த இந்தியா தடை விதித்துள்ளது.
ட்ரோன்களின் தகவல் தொடர்பு செயல்பாடுகள், கேமராக்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன் மற்றும் இயங்கு மென்பொருள் ஆகியவற்றின் உற்பத்திக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் அணு ஆயுதங்களைக் கொண்ட அண்டை நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே ராணுவப் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனத் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் முடிவை இந்தியா எடுத்து வருகிறது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, நாட்டின் ட்ரோன் டெண்டர்களைப் பற்றி விவாதிக்க பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கூட்டங்கள் அழைக்கப்பட்டன.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய எல்லையில் உள்ள நாடுகளின் உபகரணங்கள் அல்லது பிற பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் ஏலதாரர்களிடம் கூறியுள்ளனர்.
இது சீனாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை குறிக்கிறது என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |