வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
வைபவ் சூர்யவன்ஷி அதகளம்
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ரதாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார்.
ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி
இஷான் கிஷன் 29 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 (18) ஓட்டங்களும், ரிங்கு சிங் 25 (14) ஓட்டங்களும் எடுத்தனர். பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
ரியான் பர்ல் 54 ஓட்டங்களும், மதேவெரே 28 ஓட்டங்களும், பென் கர்ரன் 20 ஓட்டங்களும் விளாசினர். மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், யஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |