கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பசு மாட்டு சிறுநீரை குடிக்கும் பா.ஜ.க எம்எல்ஏ!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் சிறுநீரை குடித்து வருகிறார்.
உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பீதியில் இருக்கின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், ‘பசுவின் சிறுநீரை குடித்து வருவதால், நான் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
O3XPPF
இதுகுறித்து மேலும் அவர் பசுவின் சிறுநீரை எப்படி குடிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில், "தினமும் காலையில் பல் துலக்கிய பின்னர், வெறும் வயிற்றில் பசுவின் சிறுநீர் 5 மூடி அளவிற்கு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன்.
வெறும் வயிற்றில் தான் சிறுநீர் கலவையை குடிக்க வேண்டும். கொரோனா நோயை மட்டுமின்றி, இதய நோய்களையும் குணப்படுத்த பசுவின் சிறுநீர் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | BJP MLA Surendra Singh in UP's Ballia claimed drinking cow urine has protected him from coronavirus. He also recommended people to 'drink cow urine with a glass of cold water'. (07.05)
— ANI UP (@ANINewsUP) May 8, 2021
(Source: Self made video) pic.twitter.com/C9TYR4b5Xq
இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.