இந்திய அணியில் புதிதாக 5 வீரர்கள் சேர்ப்பு! யார் யார்? வெளியான முழு விவரம்
கொரோனா வைரஸ் இந்திய கிரிக்கெட் அணியை உலுக்கியுள்ள நிலையில் இலங்கை டி-20 தொடருக்கான இந்திய அணியில் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இலங்கை-இந்திய இடையேயான 2வது டி-20 போட்டி இன்று ஜூலை 28ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
குர்ணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்டியா உட்பட 8 வீரர்களுக்கு மேற்கொண்ட கொரோனா சோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
எனினும், அவர்கள் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டமிட்ட படி 2வது டி-20 போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 வீரர்கள் விளையாட முடியாததால் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு வலைபயிற்சி வீரர்களாக அழைத்து வரப்பட்ட ஐந்து இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.