ரஷ்யாவிடமிருந்து S-400 ஆயுதங்களை வாங்க தீவிரம் காட்டும் இந்தியா... அதிகாரிகள் உறுதி
ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
செயல்திறன் சிறப்பானது
டெனிஸ் அலிபோவ் மேலும் தெரிவிக்கையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில், S-400 அமைப்பு மற்றும் கூட்டாக தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பானது என்றே குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகால மற்றும் பரந்த அளவிலான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் S-400 வழங்கல், T-90 டாங்கிகள் மற்றும் Su-30 MKI உரிமம் பெற்ற உற்பத்தி, MiG-29 மற்றும் Kamov ஹெலிகொப்டர்கள் வழங்கல்,
INS விக்ரமாதித்யா, இந்தியாவில் Ak-203 ரைபிள்கள் உற்பத்தி மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இருதரப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு வாங்குபவர்-விற்பனையாளர் கட்டமைப்பிலிருந்து கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கிய ஒன்றாக உருவாகியுள்ளது என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன.
S-400 வான் பாதுகாப்பு அமைப்பு
இந்த மாத தொடக்கத்தில் இந்திய ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளால் பதிலடி கொடுத்து பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தின.
பாகிஸ்தான் ஏவிய பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பெருமை S-400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு உண்டு. வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்தியா விரைவில் கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கக்கூடும். இதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உறுதி செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |