கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் இந்தியாவில் முதல் மரணம்! ஆணா? பெண்ணா? அதிகாரபூர்வ தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பக்க விளைவுகளால் ஏற்பட்டுள்ள முதல் மரணத்தை இந்தியா அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அரசு குழு (ஏஇஎப்ஐ) தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் அனாபிலாக்ஸிஸ் காரணமாக முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்து இந்த குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது போன்ற 31 பக்கவிளைவு கொண்டவர்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டது இந்த குழுவின் மார்ச் 8, 2021 இல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் எனப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை காரணமாக இறந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.
உயிரிழந்தவர் ஒரு ஆண் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.