அன்றும்... இன்றும்! இந்தியாவின் கொரோனா நிலையை உணர்த்திய ஒற்றை புகைப்படம்: கலங்கும் மக்கள்
இந்தியாவில் கொரோனா நிலைமை எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை, இந்திய மக்களை உலுக்கி வருகிறது. ஆரம்பத்தில் இந்த கொரோனா பரவிய போது, போடப்பட்ட ஊரடங்கால், வெளிமாநிலங்களில் இருந்த மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
அதன் பின் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் மீண்டும் திரும்பினார். தற்போது கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் புலம்பெயர்ந்த மக்கள், தங்கள் ஊருக்கும் திரும்ப துவங்கியுள்ளனர். அந்த வகையில் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஆரம்ப காலம் கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த பெண் ஒருவர் தன் மகனை பெட்டி ஒன்றில் படுக்க வைத்து இழுத்துச் செல்கிறார்.
ஆனால், இப்போதோ சிறுவன் ஒருவன் பெண் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்துச் செல்கிறான். இந்த இரண்டையும் இணைத்து இணையவாசிகள் பதிவிட்டு, இதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என கண்கலங்கி வருகின்றனர்.