IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதமடிக்க, 471 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 465 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் சதத்தால் இந்திய அணி 364 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
மோசமான சாதனை
கடைசி நாள் போட்டியில், 371 என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி 65 ஓட்டங்கள் மற்றும் பென் டக்கெட் 149 ஓட்டங்கள் எடுத்து, 200 ஓட்டங்களை கடக்க உதவினர்.
தொடர்ந்து, ஜோ ரூட் அதிரடியாக ஆடி 53 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் கோல்டன் டக் ஆக, தொடர்ந்து களமிறங்கிய பெண் ஸ்டோக்ஸ்(33) மற்றும் ஜேமி ஸ்மித்(44) நிதானமாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
373 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவியுள்ளது.
இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
தோல்விக்கான காரணம்
தோல்வி குறித்து பேசிய அணித்தலைவர் சுப்மன் கில், "நாங்கள் 430 ஓட்டங்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகளுக்கு, வெறும் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தோம்.
இந்த போட்டியில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவிலான ஓட்டங்களை சேர்க்கவில்லை. இந்த இரு காரணங்களால் தோல்வியை தழுவினோம்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |