இந்தியா விளையாடியிருக்கும்... ஆனால் மதிக்காம போயிட்டாங்க : கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா மதிக்கவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி கடந்த 10-ஆம் திகதி மான்செஸ்டரில் நடைபெறவிருந்தது.
இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாரதவிதமாக இந்திய அணியின் உதவியாளர் Yogesh Parmar-வுக்கு கொரோனா உறுதியானதால், இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்ச்சியாளரான ரவிசாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் போன்றோருக்கும் கொரோனா உறுதியான நிலையில், தற்போது Yogesh Parmar-க்கும் உறுதியானதால், இந்திய வீரர்கள் போட்டியி கவனம் செலுத்த முடியாமல் போக, ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் Paul Newman, இந்திய அணி இந்த தொடரை மதிக்கவே இல்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து கூறுகையில், இந்தியா இந்தத் தொடரை மதிக்கவே இல்லை. அதுமட்டுமின்றி இந்திய அணியின் உதவியாளர் Yogesh Parmar-க்கு கொரோனா உறுதியானதால், இது இந்திய வீரர்களுக்கு ஒரு வித நடுக்கத்தை கொடுத்துள்ளது.
இந்த தொடர் ரத்து செய்வதற்கு Yogesh Parmar வழிவகுத்துவிட்டார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் நடைபெறாமல் இருந்திருந்தால், இந்த தொடர் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும். அந்த பணக்கார போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் ஓடிவிட்டனர்.
ஏனெனில் ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் நிறைய பேர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
அவர்கள் இதை மீறி விளையாடி கொரோனா பரிசோதனை நேர்மறையாக வந்தால், 10 நாட்கல் இங்கிலாந்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஐபிஎல் தொடரோ வரும் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அவர்கள் இந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பு லண்டனில் புத்தக வெளியிட்டு விழாவில் ரவிசாஸ்திரி மற்றும் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இங்கிருந்து கொரோனா பரவல் துவங்கியிருக்கலாம் என்று கூறி, ரவிசாஸ்திரியை அவர் குற்றம் சாட்டினார்.