கொரோனா சிகிச்சைக்கு மாட்டு சாணம், கோமியமா? 'இதெல்லாம் தப்புங்க' மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை...
கொரோனா சிகிச்சைக்கு மாட்டுச் சாணத்தை பயன்படுத்தக் கூடாது என இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்தாக மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாரத்திற்கு ஒரு முறை, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டு சிகிச்சை பெறுவதால் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
இதனிடையே மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும், மாட்டு சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரமும் எதும் இல்லை எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், "இது முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது" என்றும் "இந்த தயாரிப்புகளை உடலில் பூசிக்கொள்வதிலோ அல்லது உட்கொள்வதிலோ உடல்நல அபாயங்களும் உள்ளன - விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பிற நோய்கள் பரவக்கூடும்" என்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ. ஜெயலால் கூறினார்.
Doctors in India are warning against the practice of using cow dung in the belief it will ward off COVID-19, saying there is no scientific evidence for its effectiveness and that it risks spreading other diseases https://t.co/Zu6Avvw3iU pic.twitter.com/Jjzc5pNqVG
— Reuters (@Reuters) May 11, 2021
கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.