சூடானில் இருந்து மேலும் 360 இந்தியர்கள் மீட்பு! கப்பல் மற்றும் விமானப்படை மூலம் வெளியேற்றம்
சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆபரேஷன் காவேரி திட்டத்தின் படி கப்பல் மற்றும் விமானம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் போர்
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே போர் நடைபெற்று வருவதால் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் சூடானில் வாழும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றி அழைத்து வருகின்றனர்.
@twitter
இந்நிலையில் இந்தியா சூடானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த குழு இந்தியர்களை சூடானில் இருந்து மீட்கும் பணியை தொடர்ந்துள்ளது.
மீட்கப்பட்ட இந்தியர்கள்
இந்நிலையில் இந்திய கடற்படையிலுள்ள ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானம் மூலம் தொடர்ந்து இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
@twitter
சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து இந்தியர்களும் சவுதி அரேபியாவின் கடலோர நகரமான ஜெட்டாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு திரும்புகின்றனர்.
Happy to see off 360 Indians at Jeddah Airport in a flight bound for New Delhi
— V. Muraleedharan (@MOS_MEA) April 26, 2023
They will be reaching the motherland soon, reuniting with their families
Under #OperationKaveri the Government is working relentlessly to evacuate Indian nationals from Sudan & bring them home safely pic.twitter.com/0kCIH35jyb
’ஜெட்டா விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானத்தில் 360 இந்தியர்களை பார்த்ததில் மகிழ்ச்சி. அவர்கள் விரைவில் தாய்நாட்டை அடைவார்கள்.’
’ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்து இந்திய நாட்டினரை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது’ என வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.