பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவில் பட்டாசுகள் வெடிப்பு! சேவாக் காட்டம்
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று இந்தியாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாபசர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.
இந்த வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டதாவது, தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கபப்ட்டுள்ளது, ஆனால், நேற்று பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் சில பகுதிகள் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அவர்கள் கிரிக்கெட்டின் வெற்றியை கூட கொண்டாடியிருக்கலாம். தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் என்ன பாதிப்பு என சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Firecrackers are banned during Diwali but yesterday in parts of India there were firecrackers to celebrate Pakistan ‘s victory. Achha they must have been celebrating victory of cricket. Toh , what’s the harm in fireworks on Diwali. Hypocrisy kyun ,Saara gyaan tab hi yaad aata hai
— Virender Sehwag (@virendersehwag) October 25, 2021
இதனிடையே, நேற்று பாகிஸ்தான் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் Shashank Shekhar Jha, இதற்குப் பிறகு, தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும் இந்துகளைத் தொடத் துணிந்தால், உங்கள் அரசு நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Dear @ArvindKejriwal,
— Shashank Shekhar Jha (@shashank_ssj) October 24, 2021
This video is from Delhi's Seemapuri area.
After this, if you dare to touch a Hindu for bursting crackers on Diwali, your government will face me in court.pic.twitter.com/d5yFwYBhIo
ஆனால், டெல்லி சீமாபுரியில் திருமண நிகழ்வின் போது கூட பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.