பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ET-LDHCM ஏவுகணையை சோதனை செய்ய தயாராகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒலியை விட ஐந்து மடங்கு
ப்ராஜெக்ட் விஷ்ணுவின் ஒரு பகுதியாக, இது இந்திய பாதுகாப்பு அமைப்பில் மிகவும் வளர்ச்சி கண்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ET-LDHCM ஏவுகணையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையானது 2020 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட HSTDV ஆல் உருவாக்கப்பட்டது.
மேலும், ET-LDHCM ஏவுகணை மணிக்கு சுமார் 11,000 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியது, இதனால் எதிரி நாடுகள் அதை குறிவைப்பது கடினம். அதாவது இந்த ஏவுகணை ஒரு வினாடியில் மூன்று கிலோமீற்றர் தூரத்தை கடக்கும் திறன் கொண்டது.
மட்டுமின்றி, இந்த ஏவுகணை 1,500 கிலோமீற்றர் தூரம் வரை சென்று, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் குறிப்பிடத்தக்க பகுதியை குறிவைக்கும் திறன் கொண்டது. ET-LDHCM ஏவுகணையானது குறைந்த உயரத்தில் பறக்கிறது.
வான் பாதுகாப்பு அமைப்பு
மட்டுமின்றி விரைவாக அதன் திசையை சரிசெய்ய முடியும். எனவே, அதைக் கண்காணித்து தடுப்பது கடினம். இந்த ஏவுகணை ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் டிஆர்டிஓ மற்றும் தொழில்துறை கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.
ET-LDHCM ஏவுகணையின் முதன்மையான செயல்பாடு என்பது ரேடார் நிலையங்கள், இராணுவ தளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எதிரி மறைவிடங்களை குறிவைப்பதாகும்.
இந்த ஏவுகணையால் எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஊடுருவ முடியும். நவம்பர் 2024 இல், இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அதன் அடுத்த சோதனை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ET-LDHCM என்பதன் விரிவாக்கம் Extended Trajectory- Long Duration Hypersonic Cruise Missile என்பதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |