இந்தியாவில் இருந்து வரும் அழுத்தம்: ரணில் கைது..! வெடிக்க போகும் போராட்டம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.
இந்தியாவிலிருந்து அழுத்தம்
ரணில் விக்ரமசிங்க கைது குறித்து ஏன் இத்தகைய கைது மேற்கொள்ளப்பட்டது என்று இந்தியாவிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மறைமுக அழுத்தம் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட ரணிலின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
கைதுக்கு ஆதரவாக எழும் குரல்கள்
அதே சமயம் ரணில் கைது செய்யப்பட்டதற்கு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்தும் அநுர அரசாங்கத்தை பாராட்டியும் வருகின்றனர்.
Concerned about the detention of former Sri Lankan President Ranil Wickramasinghe on what, on the face of it, seem trivial charges. His health issues have already seen him taken to the prison hospital. I call on the government of Sri Lanka -- while fully respecting that this is… pic.twitter.com/ojuEfEu4FG
— Shashi Tharoor (@ShashiTharoor) August 23, 2025
மேலும் ரணில் உடல்நிலை சரிவு ஒரு அரசியல் நாடகம் என்றும், இத்தனை நாள் இல்லாத நோய் தற்போது எங்கிருந்து வந்தது என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |