வருடாந்திர சுங்கச்சாவடி பாஸை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு - எப்போது முதல்? எவ்வளவு கட்டணம்?
வருடாந்திர சுங்கச்சாவடி பாஸை அறிமுகப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் அரசு சுங்க கட்டணம் வசூலிக்கிறது.
தற்போது FASTag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்
குறைந்த செலவில் பயணம் மற்றும் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிவிப்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரூ.3000 விலையுள்ள இந்த பாஸ், ஒரு வருடம் அல்லது 200 பயணத்திற்கு செல்லுபடியாகும். ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் இந்த பாஸ் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Important Announcement 📢
— Nitin Gadkari (@nitin_gadkari) June 18, 2025
🔹In a transformative step towards hassle-free highway travel, we are introducing a FASTag-based Annual Pass priced at ₹3,000, effective from 15th August 2025. Valid for one year from the date of activation or up to 200 trips—whichever comes…
இந்த பாஸ் வணிக நோக்கமற்ற வாகனங்களான கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும்.
இந்தப் பாஸைப் பெற பிரத்யேக லிங்க் விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியிலும், NHAI மற்றும் MoRTH இணையதளங்களில் கொடுக்கப்படும்.
இது 60 கி.மீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்ட கால புகார்களை நிவர்த்தி செய்யும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |