இந்தியாவின் தோல்விக்கு இது தான் காரணம்! ரிஷப் பாண்ட், அய்யரை எச்சரித்த ராகுல் டிராவிட்
இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஒருநாள் தொடரையும் 3-0 என்று மோசமான தோல்வியை பதிவு செய்தது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில், ஒருநாள் தொடரின் இரண்டு சேஸிங்கிலும், 30 ஓவர் வரை நாங்கள் வெற்றிப்பாதையிலே இருந்தோம்.
அதன் பின்பு தான் போட்டி மாறியுள்ளது. பின் வரிசையில் வரும் வீரர்கள் நிதான மற்றும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும். முக்கியமான தருணங்களில் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும், நடுக்கள வீரர்கள் (ரிஷப், ஷ்ரேயாஸ்) நாங்கள் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம்.
ஆனால், அவர்களின் பங்களிப்பு அந்தளவிற்கு இல்லை. நாம் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை நினைத்து மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். கேப்டனாக கே.எல்.ராகுல் இப்போது தான் வந்துள்ளார்.
தன்னை பொறுத்தவரை சிறப்பாகவே கேப்டன்சி செய்துள்ளார். இன்னும் சில போட்டிகள் விளையாடினால், அவருக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.