நீரில் மூழ்கிய சுடுகாடு., மூதாட்டியின் சடலம் சாலையில் தகனம் செய்யப்பட்ட அவலம்!
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், சுடுகாடு இல்லாததால், சாலையில் சடலங்களை தகனம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் உள்ள தகனம் செய்யும் இடம் சிந்து நதியால் அடித்துச் செல்லப்பட்டதால் 70 வயது மூதாட்டி ஒருவர்,சாலையோரம் தகனம் செய்யப்பட்டார்.
அஜ்னாவுல் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால், அவரது இறுதிச் சடங்கை சாலையோரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று மூதாட்டியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜ்னௌல் கிராமத்தில் மாற்று தகனக் கூடம் எதுவும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியது.
இப்பகுதியில் இடைவிடாமல் பெய்த மழையால் சிந்து நதி நிரம்பி கிராமத்தில் உள்ள தகனம் செய்யும் இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கிராமம் ஓபிஎஸ் படோரியாவின் தொகுதியான மெஹ்கானின் கீழ் வருகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் எந்த கிராமமும் தகனம் செய்யாமல் இருக்க மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்று பிந்த் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி ஜே.கே.ஜெயின் தெரிவித்தார்.
Elderly woman's body cremated on road in Ajnaul village of MP's Bhind district owing to submergence of existing cremation space by swollen Sindh river and absence of any alternative crematorium facility in the village. @NewIndianXpress @TheMornStandard @santwana99 pic.twitter.com/JL0Rrw0PpH
— Anuraag Singh (@anuraag_niebpl) July 25, 2022
In a #shocking incident, natives of Ajnaul village in Bhind performed #lastrites of one person in middle of the #road, reason, no #cremation ground#MadhyaPradesh #Ajnaul #India #News #Viral #Death pic.twitter.com/rs1vBqiREN
— Free Press Journal (@fpjindia) July 25, 2022