நியூசிலாந்தை இந்தியா ஜெயித்தாலும்... இந்த பிரச்சனை இன்னும் இருக்கு! வெளிப்படையாக சொன்ன இர்பான் பதான்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றினாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு வீரர் சொதப்பி வருவதாக முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்தது.
இந்த தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது. இருப்பினும் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பிரச்சனை இருந்து வருவதாக, முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அணியில், ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை பொறுத்த வரை அவரது ஷாட் செலக்ஷனில் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது ஷாட் செலக்ஷனில் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முதல் 7 முறை ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடமுயன்று ஆட்டமிழந்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர். ஆனால் ரிஸ்க்கான வீரர் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.