இந்திய போர் விமானம் விபத்து! சற்று முன் நடந்த விபரீதம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
ஜெய்சல்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
சாம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலைவன தேசிய பூங்கா (Desert National Park) பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக ஜெய்சால்மர் எஸ்பி அஜய் சிங் தெரிவித்தார். உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், விபத்து நடந்த இடத்திற்கு அவரும் சென்று வருவதாகவும் எஸ்பி கூறினார்.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இன்று மாலை, 8:30 மணியளவில், IAF இன் MiG-21 விமானம் ஒரு பயிற்சியின் போது மேற்குத் துறையில் பறந்து விபத்துக்குள்ளானது. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This evening, around 8:30 pm, a MiG-21 aircraft of IAF met with a flying accident in the western sector during a training sortie. Further details are awaited.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021
An inquiry is being ordered.
இந்த ஆண்டு மட்டும் பல MiG-21 ரக போர் விமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த ரக விமான விபத்துக்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருவதால், இந்த விமானம் ஒரு "பறக்கும் சவப்பெட்டி" (flying coffin) என்று அழைக்கப்படுகிறது.
1971 முதல் ஏப்ரல் 2012 வரை, 482 Mig ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி, 171 விமானிகள், 39 பொதுமக்கள், 8 சேவைப் பணியாளர்கள் மற்றும் ஒரு விமானக் குழுவினர் உயிரிழந்துள்ளதாக கொன்றுள்ளன என்று அரசாங்கம் மே 2012 இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. "விபத்துக்கான காரணங்கள் மனித தவறுகள் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் இரண்டு ம்தான்" என்று அரசாங்கம் கூறுகிறது..,