இந்திய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு - நியூசிலாந்துடன் FTA ஒப்பந்தம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே FTA ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து FTA
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்(FTA) டெல்லியில் கையெழுத்தாக உள்ளது.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
We’ll sign our Free Trade Agreement with India on Monday. pic.twitter.com/PSB5YkwRon
— Christopher Luxon (@chrisluxonmp) April 24, 2026
இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் வரை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது.
இதே போல், இந்தியா தனது சுமார் 70 சதவீத வரி விதிப்பு முறைகளில் வரிகளைத் தளர்த்தும், இது நியூசிலாந்துடனான இருதரப்பு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 95 சதவீதத்தை உள்ளடக்கும்.
கம்பளி, தேன், ஒயின், வனவியல் பொருட்கள், அவகேடோ, கிவி மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களை நியூசிலாந்து ஏற்றுமதி செய்ய உள்ளது.

அதே நேரத்தில், பால் பொருட்கள், சர்க்கரை, மசாலாப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு சந்தை அணுகலை விலக்குவதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைப் பாதுகாக்கிறது.
மேலும், நியூசிலாந்து 118 சேவைத் துறைகளிலும் சந்தை அணுகலை வழங்குகிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள், தொலைத்தொடர்பு, கட்டுமானம், சுற்றுலா மற்றும் கல்வி உள்ளிட்ட 139 துணைத் துறைகளில் மிகவும் விரும்பப்படும் தேசத்திற்கான (MFN) விரிவான சலுகையையும் வழங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம், கல்வி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய நிபுணர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு நுழைவு விசாவை வழங்குகிறது. மேலும், ஆண்டுதோறும் 1,000 வேலை மற்றும் விடுமுறை விசாக்களையும் வழங்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |