ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி- இந்திய அரசு முடிவு
இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையை முதலில் தனியார் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதுவரை ஏவுகணை உற்பத்தியானது அரசு நிறுவனங்களின் கீழ் மட்டுமே நடந்தது. ஆனால், விமானங்கள், ட்ரோன்கள், கடற்படை உபகரணங்கள் போன்ற துறைகளில் தனியார் பங்கேற்பு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்படுவது, பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

Astra Mark 2, 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது சீனாவின் PL-15E நீண்ட தூர ஏவுகணைக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது.
இந்த ஏவுகணை, Tejas Mark 1A, MiG-29, Su-30 MKI மற்றும் Rafale Marine போர் விமானங்களில் பொருத்தப்பட உள்ளது.
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்
இந்த திட்டத்தில் Adani, Tata Group, Mahindra, Bharat Forge போன்ற பெரிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது Bharat Dynamics Ltd. மட்டுமே உற்பத்தி செய்து வந்த நிலையில், தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் பங்கேற்பு அவசியமாகியுள்ளது.
மேலும், Pralay எனப்படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக்கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடுத்ததாக தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஏவுகணை உற்பத்தி திறனை அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகளையும் மேம்படுத்தும். குறிப்பாக, இந்தோனேஷியா Astra ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதால், உற்பத்தி விரிவாக்கம் அவசியமாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |