பட்டப்பகலில் பயங்கரம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Georgia மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் Amit Kumar Patel(45). இவர் அதே பகுதியில் ஒரு கேஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். Amit Kumar இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் Amit Kumar தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர். தனது கேஸ் நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று வங்கியில் செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 10.00 மணியளவில் பணம் செலுத்த வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறைத்த மர்ம நபர்கள் அமித் குமாரை தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பியுள்ளனர்.
வங்கிக்கு அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்துள்ளதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த Amit Kumar உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Amit Kumar வங்கியில் பணம் செலுத்துவதை அறிந்து கேஸ் நிறுவனத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.
இதே போல் கடந்த மாதம் 17ஆம் திகதி Texas மாகாணம் Mesquite நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கடை உரிமையாளர் சாஜன் மேத்யூ(55) என்பவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக 15 வயது சிறுவனை பொலிஸ் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.