இனி பயன்படுத்தும் மொபைல் டேட்டாவிற்கும் வரி - இந்திய அரசின் திட்டம்
உலகம் முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ள நிலையில், இந்தியாவிலும் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
2025 நிதியாண்டில், இந்தியாவின் மொபைல் தரவு பயன்பாடு சுமார் 229 பில்லியன் ஜிபி ஆக இருந்துள்ளது.
மொபைல் தரவு பயன்பாட்டிற்கு வரி
இந்நிலையில், வருவாய் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தரவு பயன்பாட்டிற்கு வரி விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

செப்டம்பர் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த வரி விதிப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தொலைத்தொடர்புத் துறை (DoT) மேற்கொண்டுள்ளது.
இது வருவாயை உருவாக்கும் நோக்கில் மட்டுமல்லாது, குழந்தைகளின் திரை நேரத்தையும் குறைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது சாத்தியமற்றது, வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பக் களத்தில் இந்தியாவின் தலைமைத்துவ நிலையை பாதிக்கும் என TRAI முன்னாள் ஆலோசகர் சத்யா என். குப்தா எச்சரித்துள்ளார்.
ஒரு ஜிபி தரவு பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வரி விதித்தால் கூட, இதன் மூலம் அரசுக்கு ரூ.22,900 கோடி வருவாய் கிடைக்கும்.
ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ்க்கு பயனர்கள் 18 சதவீத GST வரி செலுத்தி வரும் நிலையில், புதிய தரவு வரி விதிக்கப்பட்டால் பயனர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |