Job: ரூ.1 லட்சம் வரை சம்பளம்.., இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் கட்டண வங்கி ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, தற்போது Consultant பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இப்பணி ஓய்வுபெற்ற நபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், பணி ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும். நல்ல செயல்பாட்டின் அடிப்படையில், ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
கல்வித் தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பனி அனுபவம்
30 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்துடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஓய்வுபெற்ற துணை பொது மேலாளர் (Deputy General Manager) அல்லது பொது மேலாளர் (General Manager) அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கி விதிமுறைகளின்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசி திகதி
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் செப்டம்பர் 10ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும், தகவல்களுக்கு வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |