முடிவுக்கு வந்த ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க விலக்கு: இந்தியாவில் விலை உயருமா?
சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான உலகளாவிய எண்ணெய் நெருக்கடிகளில் ஒன்றை, அமெரிக்கா ஏற்படுத்தித் தந்த ஒரு குறுகிய வாய்ப்பின் வாயிலாக இந்தியா பல மாதங்களாகச் சமாளித்து வந்தது.
இரட்டை நெருக்கடி
அந்த வாய்ப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கடல் வழியாகக் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடை விலக்கை மே 17 அன்று ட்ரம்ப் நிர்வாகம் காலாவதியானதாக அறிவித்தது.

இந்த முடிவு தொழில்நுட்பம் சார்ந்ததாகத் தோன்றலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒட்டுமொத்த எரிசக்தி சமன்பாட்டையே மாற்றிவிடுகிறது.
ட்ரம்பின் இந்த முடிவு வெளியான நேரம் இதைவிட மோசமானதாக இருக்க முடியாது. ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த போரின் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து கடுமையாக சரிந்துள்ளது. காப்பீட்டுச் செலவுகள் மோசமாக உயர்ந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய்க்கு சுமார் 72 டொலராக இருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, 105 டொலருக்கும் மேலாக எகிறியுள்ளது.
இந்தியா தற்போது இரட்டை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் வரத்து நிலையற்றதாக உள்ளது; ரஷ்ய எண்ணெயும் மீண்டும் பொருளாதாரத் தடைகளுக்கான அபாயத்தைக் கொண்டுள்ளது.
நெருக்கடி காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை சுமார் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட சில நாட்களிலேயே இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக, தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவின் மிகப்பெரிய பணவீக்கக் கவசமாகத் திகழ்ந்தது.

காலப்போக்கில், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக மாறியது. இந்த நிலையில் இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரான் போர் வெடித்தது. பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் பதற்றங்கள் தீவிரமடைந்த நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தைகள் மிக விரைவாக இறுக்கமடைந்தன.
அந்த அழுத்தம் இறுதியில்
சவுதி அரேபியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்தது. இந்த நிலையிலேயே ரஷ்ய எண்ணெய் தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் ஒரு தடை விலக்கை அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று, அந்த விலக்கு காலாவதியானது. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான இடர் கணக்கீட்டை ஒரே இரவில் கிட்டத்தட்ட மாற்றிவிடுகிறது. இந்தியாவிற்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை — சார்புநிலை.

எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, விநியோகம் மோசமடைந்தால், முந்தைய நெருக்கடிகளின் போது காணப்பட்ட எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் சத்தமின்றி கையிலெடுக்கக்கூடும்.
மட்டுமின்றி, எண்ணெய் விலைகள் நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையில் நீடிக்கும்போது, அந்த அழுத்தம் இறுதியில் நுகர்வோரையும் பாதிக்கிறது.
இதனால், பெட்ரோல் விலை. டீசல் விலை. எல்பிஜி சிலிண்டர்கள். விமானக் கட்டணங்கள். போக்குவரத்துச் செலவுகள். உணவுப் பணவீக்கம். எல்லாமே ஒன்றாக உயரத் தொடங்கும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |