வெளிநாட்டு நேரடி முதலீடு: சீனா உட்பட எல்லை நாடுகளுக்கு விதிகளை தளர்த்திய இந்தியா
இந்திய அரசு, சீனா உள்ளிட்ட இந்தியாவுடனான நில எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) விதிகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
2020-ல் வெளியிடப்பட்ட Press Note-3 திருத்தப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு, சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் அனைத்தும் கட்டாயமாக அரசின் அனுமதி பெறவேண்டியிருந்தது.
இப்போது அந்த நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

2000 முதல் 2025 வரை இந்தியாவற்கு வந்த மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் சீனாவின் பங்கு மிகக் குறைவு. அதாவது வெறும் சுமார் 2.51 பில்லியன் அமெரிக்க டொலர் (0.32 சதவீதம்) மட்டுமே. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
2024-2025-ல், சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 14.5 சதவீதம் குறைந்தது. ஆனால் இறக்குமதி 11.5 சதவீதம் உயர்ந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 99.2 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.
2025 ஏப்ரல்- 2026 ஜனவரி காலகட்டத்தில், சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 38 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 13 சதவீதம் உயர்ந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 92.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்தியா 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை (Apps) தடை செய்தது. இருந்தாலும், சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த புதிய FDI தளர்வு, முதலீட்டு சூழலை சீராக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India FDI policy 2026, China India trade relations, FDI rules for border countries, Press Note 3 amendment, India China investment #IndiaFDI #ChinaIndiaTrade #FDIPolicy