ரிஷப் சதம்.. 198-க்கு சுருண்டது இந்தியா! தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு சொற்ப ரன்கள் இலக்கு
3வது மற்றும் கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் 11ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு சுருண்டது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 3வது தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2வது இன்னிங்ஸில் கே.எல்.ராகு் (10), மயங்க் அகர்வால் (7), புஜாரா (9), கோலி (29), ரஹானே (1), அஸ்வின் (7), ஷ்துல் தாக்கூர் (5), உமேஷ் யாதவ்(0), பும்ரா (2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் பந்துவீச்சில் ஜேன்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ரபாடா, இங்கிடி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
3வது நாள் ஆட்டம் முடிய இன்னும் 39 ஓவர்கள் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடி வருகிறது.
3வது டெஸ்டில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.