கொத்து கொத்தாக பறிபோகும் உயிர்கள்! இந்தியாவில் 2 லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து செவ்வாய்கிழமை வரை கொரோனா பாதிப்பில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,01,187-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு அறிவித்தது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,293 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இது நாட்டின் தினசரி இறப்பு எண்ணிக்கையின் புதிய உச்சமாகும்.
அதேபோல், நேற்று ஒரே நாளில் புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்முலம், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 29,78,709-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், குணமடைவோரின் விகிதம் 82.33 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 28,27,03,789 பேருக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.