ஜேர்மனிக்கு பலாப்பழம் அனுப்பும் இந்தியா... ஒரு சுவையான செய்தி
ஜேர்மனிக்கு இந்தியாவிலிருந்து பலாப்பழம் முதலான உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஜேர்மனி ஏன் இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்கிறது என்ற கேள்வி எழலாம். உண்மை என்னவென்றால், அவை சாதாரண உணவுப்பொருட்கள் அல்ல, ஆர்கானிக் உணவுப் பொருட்கள்.
10. 2 மெட்ரிக் டன் எடையுள்ள ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற க்ளூட்டன் இல்லாத பலாப்பழ பவுடர், மற்றும் பலாப்பழ சுளைகள் இந்தியாவின் பெங்களூருவிலிருந்து ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவில், மருத்துவ மற்றும் வாசனைப்பொருட்களாக பயன்படுத்தப்படும் தாவரங்கள், தேங்காய், பலாப்பழம் மாம்பழக்கூழ், வாசனை திரவியங்கள் மற்றும் காபி ஆகிய பொருட்கள் ஆர்கானிக் முறையில் விளையச் செய்யப்படுகின்றன.
ஜேர்மனிக்கு மட்டுமல்ல, சமீபத்தில், 1.2 மெட்ரிக் டன் பிரெஷ்ஷான பலாப்பழங்கள் இந்தியாவின் திரிபுராவிலிருந்து லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம்.