ரோகித்தை தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் யார்? வெளியான புதிய தகவல்
இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி, ஒரு முறை கூட ஐசிசி கோப்பைகள் வெல்லாத காரணத்தினால், அவரை பிசிசிஐ அதிரடியாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.
அதன் பின் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து கோலி இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. துணைக்கேப்டனாக இருந்த ரோகித், தற்போது கேப்டனாக மாறியுள்ளதால், இந்திய அணிக்கு அடுத்து யார் துணைக் கேப்டன் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கே.எல்.ராகுலை துணைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் கேப்டனகாவும், கே.எல்.ராகுல் துணைக்கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.