இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் இவர் தான்! பிசிசிஐ முடிவு என தகவல்
இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் 2-1 என்று இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், அணியின் கேப்டனாக இருந்த கோலியும், இந்த தொடரோடு நான் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இதனால் இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக ரிஷப் பாண்ட், கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் தான் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், பிசிசிஐ ரோகித் சர்மாவையே டெஸ்ட் கேப்டனாக்க முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித்சர்மா கேப்டனாக உள்ளதால், மூன்று வடிவ போட்டிகளுக்கும் ஒரே நபர் கேப்டனாக இருப்பது, அணியை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்று பிசிசிஐ நம்புவதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்திய அணியை பொறுத்தவரை அதிகாலம் தனித்தனியாக கேப்டன்களை நியமித்தது கிடையாது. மூன்று வடி போட்டிகளுக்கும் ஒரே கேப்டனை நியமிப்பதே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.