முதல்முறையாக ஜப்பானுடன் கிரிக்கெட்டில் மோத உள்ள இந்திய அணி
india to play t20 against japan on 22 sep: இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக ஜப்பானுக்கு சென்று அந்த நாட்டின் கிரிக்கெட் அணியுடன் T20 போட்டியில் விளையாட உள்ளது.
ஜப்பான் - இந்தியா T20 போட்டி
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தூதரக உறவின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த T20 போட்டி நடைபெறு உள்ளது என பிசிசிஐ மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 'Sport 75' என்ற முன்னெடுப்பின் முதல் படியாக இந்த போட்டி அமையும்.
2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மனிதப் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஐசிசி தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள ஜப்பான், நடப்பு T20 சாம்பியானான இந்தியாவை முதல்முறையாக எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |