இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: துணை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 50% அபராதம்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
நடுவரின் முடிவால் விரக்தியடைந்த ரிஷப் பண்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் ஆடிய போது, பந்தின் வடிவம் மாறி விட்டதாகவும், புதிய பந்து தரும்படியும் ரிஷப் பண்ட் நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் பந்தை ஆய்வு செய்த நடுவர், பந்து சரியாக உள்ளதாக கூறி பந்தை மாற்ற மறுப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ரிஷப் பண்ட், நடுவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு பந்தை விரக்தியுடன் தரையில் வீசி ஏறிவிடுவார்.
ரிஷப் பண்ட்-க்கு அபராதம்
இந்நிலையில் நடுவரின் முடிவை எதிர்த்து செயல்பட்டதற்காக அவரது போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து 471 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு இங்கிலாந்து அணி தங்கள் முதல் இன்னிங்சில் 465 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 6 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் இந்திய அணி 364 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 371 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |