அக்டோபர் 31 வரை பருத்தி இறக்குமதிக்கு சுங்கவரி நீக்கம்
இந்திய அரசு, ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரை பருத்தி இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதனால் துணி மற்றும் ஆடைத் துறைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் சுங்கவரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பருத்தி விலை உயர்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவு காரணமாக, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

துணி மற்றும் ஆடைத் துறையில் 4.5 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதால், பருத்தி விநியோகம் தடையின்றி கிடைக்க உறுதி செய்வது அவசியமாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, உற்பத்தி செலவுகளை குறைத்து, ஏற்றுமதி போட்டித்திறனை மேம்படுத்தும். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும்
விவசாயிகளின் நலனை பாதுகாக்க, அரசு பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்தியுள்ளது. நடுத்தர நீள பருத்திக்கு ரூ.8,267 மற்றும் நீளமான பருத்திக்கு ரூ.8,667 MSP நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Cotton Corporation of India (CCI) மூலம் MSP நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முடிவு, நுகர்வோருக்கு விலை நிலைத்தன்மையையும், உற்பத்தியாளர்களுக்கு பருத்தி கிடைப்பதை உறுதி செய்யும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |