சாதனை உச்சம்... கோதுமை, அரிசி சாகுபடி தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவல்
ஜூன் 2025 உடன் முடிவடையும் ஆண்டில் இந்தியா 117.5 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை உற்பத்தி செய்யும் என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேளாண் அமைச்சகம்
இது மார்ச் மாதத்திற்கான 115.4 மில்லியன் டன் கணிப்பை விட அதிகமாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, 2024 ஆம் ஆண்டில் 113.3 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்ததாக வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், முன்னணி தொழில்துறை அமைப்பு ஒன்று தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மதிப்பீட்டை விட கோதுமை சாகுபடி கிட்டத்தட்ட 6.25 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கூறியது.
2025 ஆம் ஆண்டில் நாட்டின் அரிசி உற்பத்தியும் சாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த ஆண்டின் 137.8 மில்லியன் டன்களிலிருந்து 149 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்று அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்க
கோதுமை மற்றும் அரிசியின் சாதனை உற்பத்தி நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியை கடந்த ஆண்டின் 332.3 மில்லியன் டன்னிலிருந்து 354 மில்லியன் டன்னாக உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கோதுமை அறுவடை வலுவாக இருப்பதால், அதன் இருப்பு வேகமாக அதிகரித்து வருகிறது, அதாவது இந்த ஆண்டு இறக்குமதி இல்லாமல் உள்நாட்டு தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, தற்போது ஏற்பட்டுள்ள அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |