இன்னும் சில ஆண்டுகளில் ஜேர்மனியையும் இந்தியா முந்திவிடும்: ஆரூடம் பலிக்குமா?
பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.
இன்னும் சில ஆண்டுகளில் ஜேர்மனியையும் பின்னுக்குத்தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகிவிடும் இந்தியா என கணிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் ஜேர்மனியையும், ஜப்பானையும் பின்னுக்குத்தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகிவிடும் என பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு, 2027ஆம் ஆண்டில் இந்தியா ஜேர்மனியையும், 2029இல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகிவிடும் என கணித்துள்ளது.
21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வேகமாக வளர்ச்சியடைந்த சீனா, உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்தியாவும், சரியான பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில், இந்தியா ஜேர்மனியையும், பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகிவிடுவது சாத்தியமே என்கிறது பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு.