டி20 போட்டியிலும் சொதப்பிய இலங்கை! இந்தியா அசத்தல் வெற்றி: ஆட்டத்தை முடித்த புவனேஷ்வர் குமார்
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.
அதன் படி முதலில் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகார் தாவான் 46 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக வகிண்டு ஹசரங்கா மற்றும் டுஷ்மண்டா சமீரா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான மினோட் பனுகா 10 ஓட்டங்களிலும், அடுத்து வந்த தனஞ்சிய டி சில்வா 9 ஓட்டங்கள், மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்ணாண்டோ 26 ஓட்டங்கள் என வந்த வேகத்தில் பவுலியன் திரும்பியதால், இலங்கை அதில் மீளமுடியாமல் திணறியது.
இறுதியாக சரித் அசலன்கா 26 பந்தில் 44 ஓட்டங்கள் எடுக்க இலங்கை அணி 18.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 126 ஓட்டங்கள் எடுத்து, 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியில், புவனேஷ்வ குமார் 3.3 ஓவர் வீசி, 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.