27 வயது இந்திய விமானப்படை வீரர் மர்ம மரணம்! கிடைத்த ஏழு பக்க குறிப்பு.. உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
இளம் விமானப்படை வீரர் சாவில் மர்மம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு
பொலிஸார் அங்கித்தின் அறையில் இருந்து 7 பக்கங்கள் கொண்ட குறிப்பு ஒன்றை கண்டெடுத்தனர்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் விமானப்படை வீரர் மர்ம மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 21ஆம் திகதி, அங்கித் குமார் ஜா (27) என்ற இந்திய விமானப்படை வீரர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும், விமானப்படையைச் சேர்ந்த 6 உயரதிகாரிகள் மீது அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிஸார், அங்கித்தின் அறையில் இருந்து 7 பக்கங்கள் கொண்ட குறிப்பு ஒன்றை கண்டெடுத்தனர். மேலும், அங்கித் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் அங்கித்தின் சகோதரர் அளித்துள்ள புகாரில், உயரதிகாரிகள் சான்றுகளை அழித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படியும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.