உலகின் மிகச் சிறந்த மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி!
உலகின் மிகச் சிறந்த மாணவா்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நடாஷா பெரியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 11 வயது நடாஷா பெரியை (Natasha Peri) உலகின் தலைசிறந்த மாணவா்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழமை தெரிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தோ்வு (Scholastic Assessment Test-SAT) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தோ்வு (American College Testing-ACT) ஆகிய தோ்வுகளில் நடாஷா பெரி வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 2020-21 இளம் திறமையாளா்கள் தேடல் மையத்தில், 84 நாடுகளிலிருந்து சுமாா் 19,000 மாணவா்கள் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக நியூஜொ்ஸியிலுள்ள பள்ளியில் படித்து வரும் நடாஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
5-ஆம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தோ்வுகளில் அவா் அளித்த பதில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது.
அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவா்கள் SAT அல்லது ACT தோ்வெழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.