இந்திய வம்சாவளி நபருக்கு அமெரிக்காவில் 51 மாதங்கள் சிறை
முதியவர்களை ஏமாற்றியதற்காக இந்திய வம்சாவளி நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 51 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆகாஷ் கல்பேஷ் காந்தி மற்றும் இந்தியாவில் உள்ள கால் சென்டர்களில் செயல்படும் அவரது சதிகாரர்கள், முதியவர்களைக் குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட முதியவர்களை தொடர்புகொண்டு அவர்களது சமூக பாதுகாப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட கற்பனையான பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லையென்றால் நிதி அழிவு அல்லது குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று கூறி அதனை சரி செய்ய பணத்தை அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆகாஷ் கல்பேஷ் தனது திட்டத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, தனது சதிகாரர்களை சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்க முகவர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
ஜூலை 8, 2021 அன்று பியூமண்டில் உள்ள கூட்டாட்சி கிராண்ட் ஜூரியால் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த மோசடி நிரூபிக்கப்பட்ட நிலையில், டெக்சாஸின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்சியா க்ரோன், ஆகாஷ் கல்பேஷ் காந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அவர்களில் பலர் வயதானவர்கள்.
சரியான தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆகாஷ் கல்பேஷுக்கு அமெரிக்க நீதிமன்றம் 51 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஃபெடரல் வக்கீல்கள், காந்தியும் அவரது சக சதிகாரர்களும் அமெரிக்கா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
மோசடி செய்த பெரும்பாலான பணத்தை இந்தியாவில் வெவ்வேறு வழிகளில் வெவேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.